என் காதலிக்காக
கவிதை எழுத
கையில் பேனாடவுடன்
கற்பனைக்காக காத்திருந்தேன்
காலம் தான் கரைந்தது
கவிதை வரவில்லை
அவளை நிலவொடு ஒப்பிட்டேன்
நிலவும் ஒரு நாள்
தேய்ந்து விடும் என்றுணர்ந்தேன்
அவளை மலரோடு ஒப்பிட்டேன்
மலரும் ஒரு நாளில்
வாடி விடும் என்பதறிவேன்
இறுதியில் கம்பனிடம்
அவளை காண்பித்தேன்
கல்லறையில் இருந்து எழுந்த
கம்பன் எழுதி முடித்தான்
அவள் எந்த கவிஞனின் கற்பனைக்கும்
எட்டாத கவிதை என்று!
No comments:
Post a Comment