Monday, December 13, 2010

என்னவள்

நிலவில்லாத மேகத்தின்
சில பாகங்களை
நீக்கி விட்டு பார்த்தேன்
தெரிந்தது
அவள் முகம்

சிதறி கிடந்த
சில நட்சதிரங்களை
சில இடங்களில் வைத்து பார்த்தேன்
சிரித்தது
அவள் முகம்

கடவுளே!

கருமை நிறத்தில்
இத்தனை கலையான
பெண் சிலையா?

அருவியாய் கொட்டும் கூந்தலும்
அளவான இடுப்பும்
சிலிர்க்க வைக்கும் சிரிப்பும்
மொத்தத்தில்

அவள்
ஒரு
சித்திரவதை!

No comments:

Post a Comment